என் துன்பம் நிறைந்த நாட்களிலே
en thunbam niraindha naatkalilae
என் துன்பம் நிறைந்த நாட்களிலே இன்பமாக வந்தவரே வியாதியின் கொடூர வேதனையில் சுகத்தை தந்தவரே என் தனிமை நிறைந்த நாட்களில் நண்பனாக வந்தவரே உலகமே என்னை வெறுத்தாலும் துணையாய் நின்றவரே
என் நெஞ்சில் நிறைந்தவர் இயேசுவே என் உயிரில் கலந்தவர் இயேசுவே-2
உம்மை நேசிக்கின்றேன் என் இயேசுவே உம்மை சுவாசிக்கின்றேன் என் நேசரே உம்மை நேசிக்கின்றேன் என் இயேசுவே உம்மை நேசிக்கின்றேன்...
1.பாவியான எனக்காய் பலியானீரே யாரும் இல்லா எனக்காய் யாவும் செய்தீரே-2 என் நெஞ்சில் நிறைந்தவர் இயேசுவே என் உயிரில் கலந்தவர் இயேசுவே-2-உம்மை