என் சமூகம் உன் முன்
en samoogam un mun
என் சமூகம் உன் முன் செல்லும் ஒன்றுக்கும் கலங்காதே உன்னை ஒரு போதும் கைவிட மாட்டேன் அழைத்ததும் நான் தானே
அதிதகப்பனான அந்த ஆபிரகாமை அழைத்ததும் நான் கரம் பிடித்தவனை கடல் மணலளவாய் கர்த்தர் நான் நடத்தவில்லையா
ஆடுகள் பின் அலைந்த அந்த தாவீதை அழைத்ததும் நான் அந்த தாவீதின் வேரில் கிளையாய் துளிர்த்தவர் தலையை நான் உயர்த்தவில்லையா
ஈசாக்கின் தேவனும் நான் அந்த யாக்கோபின் தேவனும் நான் அடிமையாய் போன யோசேப்பை தேசத்து அதிபதியாக்கியதும் நான்
யாருக்கும் அடிமையில்லை நீ எவரிலும் தாழ்வதில்லை இராஜாவை தள்ளி உன்னை இராஜாவாய் ஆக்கும் இராஜாதி ராஜனல்லவா