என் நேசர் இயேசுவை
en nesar yesuvai
என் நேசர் இயேசுவை நான் என்றுமும் பாடுவேன் என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர் என் நேசர் லீலியிலும் வெண்மையானவர் என் வாழ்வில் நறுமணமீந்தவர்
1. பெலனற்றுப் போகையில் என் பெலனவரே இன்ப துன்ப நேரத்தில் என் நண்பரவரே பொற்றள வீதியில் பாடி மகிழ என் நேசரேசு மீட்டுக் கொள்வாரே
2. கடும் புயல் சீறிடும் அலைகள் மாதிடும் கண்ணுக்கெட்டா கரைதனில் உள்ளம் நாடிடும் பொற்கரம் நோக்கி என் கண்கள் தொடுப்பேன் என் நேசரேசு மீட்டுக் கொள்வாரே
3. எட்டியாய் கசந்திட்ட என் வாழ்வு இனித்திட எத்தனாய் அலைந்திடாது நித்தம் பின் செல்ல ஏந்திட்டார் பொற்கரத்தில் ஆவலாய் என்னை எந்நாளும் இன்ப துதிகள் பாடவே