என் நெருக்கத்தின் நடுவிலும்
en nerukkathin naduvilum
1. என் நெருக்கத்தின் நடுவிலும் பெருக்கத்தை தருபவர். என் வறுமையின் நடுவிலும் வளர்ச்சியை தருபவர். நான் கொடுத்ததை காட்டிலும் அதிகமாய் செய்பவர். இப்போதிருப்பதைப் பார்க்கிலும் என்னை ஆசீர்வதிப்பவர்.
தன் (அவர்) வாக்கில் உண்மையாய் இருப்பதில் சிறந்தவர். தன் (அவர்) வாக்கை தலைமுறை தலைமுறையாய் காப்பவர்.
2. என் துன்பத்தின் நடுவிலும் இன்பத்தை தருபவர். என் அழுகையின் மத்தியில் அற்புதம் செய்பவர். என் பயத்தின் நடுவிலும் பாதையை திறப்பவர். என் தனிமையின் மத்தியில் துணையாய் இருப்பவர்.
3. நான் இழந்ததைப் பார்க்கிலும் சிறப்பாய் தருபவர். நான் விதைத்ததை காட்டிலும் விளைச்சலைக் கொடுப்பவர். நான் நினைப்பதற்கும் மேலாய் நிறைவாய் தருபவர். நான் ஜெபித்ததற்கும் மேலாய் ஜெயத்தைக் கொடுப்பவர்.