என் மனமென்னும் வானில்
en manamennum vaanil
என் மனமென்னும் வானில் அன்பென்னும் பொருள்தனை அகநிறைவோடு அளிக்க வந்தேன் இதை அன்புடன் ஏற்பாய் இறைவனே - 2
பூவும் காயும் கனிகளும் பொன்னும் பொருளும் மணிகளும் யாவும் உமது உடைமையே நானும் உமது அடிமையே ஏற்றுக் கொள்வாய் என் இறைவனே
கருணையின் சுனையே இறைவனே கடமையின் நிறைவை நீ தருவாய் வாழ்வை பலியாய் தந்திடுவேன் ஏற்று இறங்கிடும் தெய்வமே எம்மையே பலியாய் மாற்றிடுவாய்