என் கர்த்தர் பெரியவர் நல்லவர்
en karthar periyavar nallavar
என் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர் கூடாதது ஒன்றும் இல்லை
1. சாபக்கேட்டை சிலுவையால் மாற்றி இயேசுவின் ஆசீர்வாதம் பெற்றுத்தந்தார் வியாதியின் கூரை நிர்மூலமாக்கி சாத்தானை சிலுவையில் நசுக்கிவிட்டார் இயேசுவின் நாமத்தில் ஜெயமெடுப்பேன் உலகத்தில் ஜெயமாக வாழ்ந்திடுவேன் இயேசு வார்த்தை உண்மை நீ நம்புவாயானால்- உன்னை பார்த்து சொல்லுவேன்
2. உலகத்தின் மாயைகள் அழிந்துவிடும் உலகத்தின் துன்பங்கள் தீர்ந்துவிடும் இயேசுவை உறுதியாய் பற்றிக்கொண்டால், உலகத்தில் ஜெயமாக வாழ்ந்திடுவாய் இயேசுவே சத்தியம் நம்புவாயானால் இயேசுவே நித்தியம் நம்புவாயானால் உன் வாழ்கை ஜெயமாக மாறிடுமே- உன்னை பார்த்து சொல்லுவேன்
3. கஷ்ட்டத்தை எல்லாம் சந்தோசமாக்கி இயேசுவின் ஆனந்தம் அடைந்திடுவேன் கசப்பான காரியங்கள் மறந்திடுவேன், இயேசுவை எனக்குள்ளே நிரப்பிடுவேன் கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ நடந்து நீரூற்றாய் என்றென்றும் மாற்றிக்கொள்ளுவேன் இயேசுவின் நாமத்தில் சமாதானமே – உன்னை பார்த்து சொல்லுவேன்.