என் ஜீவனுள்ள நாளெல்லாம்
en jeevanulla naalellaam
என் ஜீவனுள்ள நாளெல்லாம் ஆராதிப்பேன் இயேசுவை
என் வீட்டாரும் , என் சபையாரும் ஆராதிப்போம் இயேசுவை
நான் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவை (2)
என் கஷ்டங்களில் உம்மை ஆராதிப்பேன் என் நஷ்டங்களில் உம்மை ஆராதிப்பேன் என் துயரங்களில் உம்மை ஆராதிப்பேன் என் கவலைகளில் உம்மை ஆராதிப்பேன்
என் நிறைவினில் உம்மை ஆராதிப்பேன் என் உயர்வினில் உம்மை ஆராதிப்பேன் என் செழுமையில் உம்மை ஆராதிப்பேன் என் முழுமையில் உம்மை ஆராதிப்பேன்
என் வறுமையில் உம்மை ஆராதிப்பேன் என் சிறுமையில் உம்மை ஆராதிப்பேன் என் ஏழ்மையில் உம்மை ஆராதிப்பேன் என் தாழ்வினில் உம்மை ஆராதிப்பேன்
எனக்காய் பூமி வந்தார் பூமியில் பாடு பட்டார் சிலுவையில் ஜீவன் தந்தார் விலையேறப்பெற்ற ரத்தத்தினால் என்னை சுத்திகரித்து இரட்சித்து மீட்டெடுத்து மறுவாழ்வு தந்து ஆராதிக்கும் வழிமுறை என்ற புத்தகத்தை எழுத வைத்து ஆராதிப்பேன் என்ற பாடலை உங்களிடம் கொண்டு சேர்க்க கிருபை தந்து – என்னை சேவகனாக்கி ஊழியனாக்கி மனிதனாக்கி அழகு பார்த்த இப்படி பட்ட தேவனை நான் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன், ஆராதிப்பேன் ஆராதிப்பேன், ஆராதிப்பேன்.