என் ஜீவன் ஆனாலும்
en jeevan aanaalum
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன் நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும் பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்
திறப்பில் நிக்க தவரினேனே தேசம் அழியாமல் காத்திடவே ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே
பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம் தேடிடவே மறந்திட்டேனே பரிசுத்த ஆவி பருகிட செய்தீர் நித்தம் உம் வழி செய்திடவே
சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம் கள்ளனையும் மற்றும் விந்தை உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே
உலகின் மாயை வலையில் விழுந்தேன் தப்பிடமல் சிக்குண்டேனே உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை
எப்போ வருவீர் என் ஜேசுநாதா காத்திருப்பேன் ஏங்கிடுவேன் கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே