என் இருதயத்தின் வாஞ்சையை
en irudhayathin vaanjaiyai
என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன் சிறப்பானதையே அவர் செய்வார் காலங்கள் கடந்து போனாலும் சிறப்பானதையே அவர் செய்வார் - 2
கண்ணீர் நதியாய் ஓடினாலும் சிறப்பானதையே அவர் செய்வார் நம்பிக்கை தளர்ந்து போனாலும் சிறப்பானதையே அவர் செய்வார் - 2 - என் இருதயத்தின்
எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும் சிறப்பானதையே அவர் செய்வார் சூழ்நிலைகள் இருண்டு நின்றாலும் சிறப்பானதையே அவர் செய்வார் எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும் சிறப்பானதையே அவர் செய்வார் சந்தேகத்தின் விளிம்பில் நின்றாலும் சிறப்பானதையே அவர் செய்வார் - என் இருதயத்தின்
மனிதர்கள் மறைந்தாலும் சிறப்பானதையே அவர் செய்வார் கனவுகள் கரைந்தாலும் சிறப்பானதையே அவர் செய்வார் - 2
உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன் சிறப்பானதையே அவர் செய்வார் காலங்கள் கடந்து போனாலும் சிறப்பானதையே அவர் செய்வார் உன் காலங்கள் கடந்து போனாலும் சிறப்பானதையே அவர் செய்வார் - 2