என் தேவனே உம்மை
en devanae ummai
என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே உம் நாமத்தை என்றும் துதித்திடுவேனே
1. ஏழைக்கு பெலனான கர்த்தர் நீரே எளியனுக்குத் திடனான தேவன் நீரே பெரு வெள்ளத்தில் தப்பிக்கொள்ள அடைக்கலம் நீரே வெயிலுக்கு ஒதுங்கிக் கொள்ள நிழலானோர் நீர்
2. மரணத்தை ஜெயமாக விழுங்கினீரே மானிடரின் கண்ணீரைத் துடைப்பவரே நம்பினோரின் நிந்தைகளை நீக்குபவரே நித்தம் நித்தம் அதிசயங்கள் செய்பவர் நீரே
3. உமக்காக என்னை உருவாக்கினீரே உதிர காயம் ஈந்து என்னை மீட்டவரே பெயரை சொல்லி பூர்ணமாய் அழைத்துக் கொண்டீரே புதியதொன்று என்னிலே செய்திட நீரே
4. கல்விமானின் நாவை எனக்குத் தருபவரே காலைதோறும் கற்றுக் கொள்ள செய்பவரே நீதியின் கரத்தால் என்னைத் தாங்குபவரே நித்திய நித்திய வெளிச்சமாக இருப்பவர் நீரே