என் தேவனே என் ராஜனே
en devanae en raajanae
என் தேவனே என் ராஜனே என்றென்றும் உம்மையே நம்பிடுவேன்
1.எனக்காக முன்குறித்த காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்திடுவீர் உம் பாதத்தில் தினம் அமர்ந்திருப்பேன்
2.எனக்காக நீர் தந்த தரிசனங்கள் ஒரு நாளில் நிச்சயமாய் நிறைவேற்றுவீர் உம் பாதத்தில் தினம் காத்திருப்பேன்
3.வானமும் பூமியும் மாறிடினும் ஒரு நாளும் உம் வார்த்தை மாறிடாதே உம் வார்த்தையில் தினம் வளர்ந்திடுவேன்
4.சூழ்நிலைகள் யாவும் எதிரானாலும் ஒளிவரும் நேரம் இருளானாலும் உன் மார்பிலே நான் சாய்ந்திடுவேன்
5.யேகோவா யீரே என்பவரே எனக்காக யாவையும் செய்து முடிப்பீர் என்றென்றும் உம்மிலே நிலைத்திருப்பேன்