என் தேவன் எனக்காய் யாவையும்
en devan enakkaay yaavaiyum
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார் நான் எதைக் கண்டும் அஞ்சிடேன் என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார் நான் எதைக் கண்டும் பயப்படேன்
நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன் நான் சோர்ந்திடேன் ஒரு போதும்
என்னென்ன துன்பங்கள் வந்தாலும் எந்தன் இயேசு என்னை மறவார் எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும் இயேசு என்னோடு என்றுமிருப்பார்
இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார் என் மேல் அன்பு வைப்பார் என்றுமே
முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும் என் வாழ்க்கை இயேசு கரத்தில் பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும் தினம் வெளிச்சம் இயேசு எனக்கு