என் ஆயனாய் இறைவன்
en aayanaay iraivan
என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?
என்னை அவர் பசும்புல் பூமியிலே எந்நேரமும் நடத்திடும் போதினிலே - 2 என்றும் இன்பம் ஆ ... ஆ என்றும் இன்பம் ஆ... ஆ என்றென்றும் இன்பமல்லவா!
என்னோடவர் வாழ்ந்திடும் போதினிலே எங்கே இருள் படர்ந்திரும் பாதையிலே - 2 எங்கும் ஒளி ஆ... ஆ எங்கும் ஒளி ஆ... ஆ எங்கெங்கும் ஒளி அல்லவா!
என்னை அவர் அன்பால் நிரப்பியதால் எல்லோர்க்குமே நண்பனாய் ஆக்கியதால் - 2 என்னுள்ளமே ஆ... ஆ - என் தேவனை ஆ... ஆ எந்நாளும் புகழ்ந்திடுமே