என் ஆத்துமாவே நீ
en aathumaavae nee
என் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதி முழு உள்ளத்தோடு என் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதி முழு இதயத்தோடு
இந்நாள் வரை உன்னை ஆதரித்த, இந்நாள் வரை உன் மேல் அன்பு வைத்த - உன் ஆண்டவரையே நீ தொழுதேற்று
உந்தன் உள்ளத்தின் ஆழம்தனை ஆராய்ந்து அறிந்தவர் அவரே உள்ளங்-கைகளில் வரைந்து உன்னை பாதுகாப்பவர் அவரே அவர் சமூகமே ஆனந்தமே பிரசன்னம் பேரின்பமே
எல்லை எங்கும் சமாதானமே என்றும்(என்றென்றும் ) தருபவர் அவரே எல்லை இல்லா சந்தோஷமே எந்நாளும் தருபவர் அவரே(2) அவர் சமூகமே ஆனந்தமே பிரசன்னம் பேரின்பமே
தாழ்மையிலே நினைத்து உன்னை உயர்த்தி வைத்தவர் அவரே கிருபையினால் நிறைத்து உன்னை ஆசிர்வதிப்பவர் அவரே அவர் சமூகமே ஆனந்தமே பிரசன்னம் பேரின்பமே