என் ஆத்துமாவே கலங்கிடாதே
en aathumaavae kalangidaadhae
என் ஆத்துமாவே கலங்கிடாதே உன்னத தேவன் உன் அடைக்கலமே வானமும் பூமியும் தானம் விட்டு நிலை மாறினாலும்
1. பஞ்சம் பசியோ நிர்வாணமோ மிஞ்சும் வறுமையோ வந்திடினும் கொஞ்சமும் அஞ்சாதே தஞ்சம் தந்து உன்னைத் தாங்கிடுவார்
2. உற்றார் உறவினர் மற்றும் பலர் குற்றமே கூறித் திரிந்திடினும் கொற்றவன் இயேசுன்னை பெற்ற பிதாவைப் போல் அரவணைப்பார்
3. நெஞ்சில் விசாரங்கள் பெருகுகையில் அஞ்சாதே என்றவர் வசனம் தேற்றும் வஞ்சகன் எய்திடும் நஞ்சாம் கணைகளைத் தகர்த்திடுவார்
4. வாழ்க்கைப் படகினில் அலைகள் மோதி ஆழ்த்துகையில் உன் அருகில் நிற்பார் சூழ்ந்திடும் புயலை நீக்கி வாழ்ந்திடவே வலக்கரம் பிடிப்பார்
5. மரணமே வந்தாலும் மருளாதே சரணடைந்தால் தைரியம் தந்திடுவார் அரணவர் ஆபத்தில் திரணமாய் மதிப்பாய் உன் ஜீவனையே
6. துன்ப பாதை செல்ல துணிந்திடுவாய் அன்பர் சென்ற பாதை அதுவே தான் துன்பமே உன் பங்கு துன்ப மூலம் தேவ ராஜ்யம் செல்வாய்
7. மக்கள் மனைவி மாதா பிதா எக்காலமும் இடர் இழைத்திடினும் பக்கமே நிற்பாரே துக்கமெல்லாம் தூர அகற்றிடுவார்