என் ஆத்துமா கர்த்தரை
en aathumaa kartharai
என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது என் ஆவி என் தேவனில் களிகூர்கிறது (2)
வல்லமையுடையவர் மகிமையாய் செய்தார் அவரின் நாமம் பரிசுத்தம் உள்ளதே (2)
என் தாழ்மையை நோக்கி பார்த்தாரே என் கண்ணீர் அவர் துருத்தியில் அல்லோ
பலவானை கீழே தள்ளினார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்
தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் செழிப்பான இடங்களில் கொண்டுவந்து சேர்த்தீர்
இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலமும் நமது தேவன்