எல்லோரும் கூடுங்கள்
ellorum koodungal
எல்லோரும் கூடுங்கள் உன்னதன் சந்நிதியில் உச்சிதமாய்த் துதிக்க
எந்நாளும் எம்மிலே சொன்ன சொற்படியே தன் தயவாலவர் தாங்கியதால் அன்னையாம வரை இன்னிசையதினால் அன்புடனே துதிப்போம் - மிக இன்பமாய் அடிபணிந்து - எல்
அற்புதமாக தற்பரன் நம்மையே நிர்ப்பந்த நிலையினின்றேற்றியதால் போற்றுவோம் என்றுமே ஏத்துவோம் துதியே சாற்றுவோம் தோத்திரமே - மிக இன்பமாய் அடிபணிந்து - எல்
தூதரும் கண்டிடா தூய நற்பணியை தூசியா மடியாரும் செய்வதற்காய் துப்புர உண்மையாக எப்போதும் நடக்க அப்பன் அருளியதால் - மிக இன்பமாய் அடிபணிந்து - எல்
நித்திய காலமாய்ச் சுத்தரைக் கண்டிடக் கர்த்தர் நமக்கு செய்ததால் பாத்திரமற்றோர் நாம ஸ்தோத்திரம் சொல்லுவோம் காத்திரா நன்மைகட்கே - மிக இன்பமாய் அடிபணிந்து எல்