எக்காள சத்தத்தால்
ekkaala sathathaal
எக்காள சத்தத்தால் வீறுகொண்டு நீ எழும்பு இக்கால எலியாவே கர்த்தருக்காய் எழும்பு சீயோனே உன் வல்லமையை தரித்தெழும்பு கோலியாத்தை வீழ்த்திடவும் தேவஜனம் மகிழ்ந்திடவும் கர்த்தருக்காய் நீ எழும்பு
ஜீவனுள்ள தேவனுண்டு, கல்லுமுண்டு, கவணுமுண்டு வைராக்கியமாய் எழும்பு
கிதியோனே எழும்புவாயே, அடிமைத்தனம் முறிந்திடவேஉனக்குள்ள பெலன் போதுமே
எதிர்த்து நிற்க கூடாத வாக்கினையும் வல்லமையும் பெற்றிடவே நீ எழும்பு
தெபொராக்கள் எழும்ப வேண்டும், எஸ்தர்கள் ஜெபிக்க வேண்டும் தேசத்துக்காய் நீ எழும்பு
எரிகோக்கள் தகர்க்க வேண்டும், பாகால்கள் அழியவேண்டும் வெற்றி வாகை சூட எழும்பு
சர்ப்பங்களை மிதித்திடவும், சாபங்களை முறித்திடவும் அதிகாரத்தோடே எழும்பு
ஜெயத்தின்மேலே ஜெயம் பெற்று சீயோனை சுதந்தரிக்க தீர்மானமாய் எழும்பு