எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ebireyargalin siruvar kuzhaam
எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக் கிளைகள் பிடித்தவராய் உன்னதங்களிலே ஒசான்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே
மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆவர்டவருடையன பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும் அவர் தம் உடைமையே ஏனென்றால் கடல்களின் மீது பூவுலகை நிலை நிறுத்தியவர் அவரே ஆறுகளின் மீது அதை நிலைநாட்டியவர் அவரே
ஆண்டவர் மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார் ? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார் ? சற்ற செயலினன் தூய உள்ளத்தினன் பயனற்றதில் மனத்தைச் செலுத்தாதவன் தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்