தேவன்பின் ஜீவியமே
devanbin jeeviyamae
தேவன்பின் ஜீவியமே தெய்வ தாசருக்கவசியமே
1.ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால் உலகம் எமை எடுத்தே - 2 ஏசுவின் சீஷர்கள் இவர்களென்றே மெய்ச் சாட்சி பகர்ந்திடுமே - நற்சாட்சி - 2
2.அன்புக்கு மாறாய் மன மதிலெழும்பும் வம்புகளை ஒழித்தே - 2 தேவன் அன்பாக இருப்பதினாலே அன்பினால் நிறைந்திடுவோம் - 2
3.பாசமாய் எமையும் நேசித்தாரேசு ஜீவனையே ஈந்தே நாமுமே - 2 அது போல் ஒருவரிலொருவர் நேசமாய் வாழ்ந்திடுவோம் - நல் - 2
4.எது இருந்தாலும் அன்பிலையானால் நான் ஒன்றுமில்லையென்றே - 2 அப்போஸ்தலன் தான் உறுதியாய் உரைத்தே போதனை புரிந்தாரே - நற் - 2
5. அன்பதின் அகலம் நீளமும் உயரமும் ஆழமும் அறிந்திடவே -2 சுத்தர்கள் ஒன்றாய் ஒரு மனதுடனே - 2 கர்த்தரை உயர்த்திடுவோம் - எம்
6. தாசர்கள் நாமே உணர்ந்திடுவோமே இயேசுவின் வாக்கிதையே இருதயமிதிலே பதிந்திடச்செய்ய - 2 தேவா கடாட்சியுமே - எம்