தேவனே கண்ணோக்குமே
devanae kannokkumae
1. தேவனே கண்ணோக்குமே ஜீவன் வேண்டி நிற்கிறேன் அன்பாய்ச் சேர்த்து ரட்சியும் என்னை ஆசீர்வதியும். என்னையும் (2) என்னை ஆசீர்வதியும்.
2. நல்ல வார்த்தை சொல்லுமே வல்ல கையை நீட்டுமே வந்த ஏழை யெனையே சந்தியும் இந்நேரமே. என்னையும் (2) என்னை ஆசீர்வதியும்.
3. கெஞ்சிக் கேட்டு நிற்கையில் தஞ்சம் தேடும் எந்தனில் ஜீவன் தந்துயிர்ப்பியும் பாவம் நீக்கி ரட்சியும். என்னையும் (2) என்னை ஆசீர்வதியும்.
4. உந்தன் மைந்தன் நீதியை நம்பி வந்த பாவியை தூயனே! நீர் தேற்றுவீர் நாயனே ஆட்கொள்ளுவீர். என்னையும் (2) என்னை ஆசீர்வதியும்.