தேவனாலே கூடாத காரியம்
devanaalae koodaadha kaariyam
தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லையே அழைத்த தேவன் நடத்திடுவார் என்றென்றும் கலங்காதே
என்னைப் படைத்த தெய்வமே என்னை அழைத்த தெய்வமே வாக்குத் தத்தங்கள் நீர் தந்த தெய்வமே அந்த வாக்குத் தத்தங்கள் நிறைவேற்ற வாருமே
உம்மை நம்பிடுவேனே நீர் எந்தன் தெய்வமே உம்மை ஆராதிப்பேனே எந்தன் இயேசு இராஜனே
யோசேப்பைப் போல் பின்பற்றுவேன் அடிமையாய் விற்றாலுமே தானியேல் போல் ஜெபித்திடுவேன் உலகமே எதிர்த்தாலுமே
யோபு போல பின்பற்றுவேன் எல்லாமே இழந்தாலுமே பவுலைப் போல ஊழியம் செய்வேன் மனிதர்கள் எதிர்த்தாலுமே