தேவாதி தேவனாமே ராஜாதி
devaadhi devanaamae raajaadhi
தேவாதி தேவனாமே ராஜாதிராஜனாமே என்னுள்ளத்தில் வாருமே ஆமென் ஆமென் சாலேம் ராஜாசாரோன் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிநீர் - சிங்காசனம் வீற்றிருக்கும் யூதராஜ சிங்கம் நீர்
1. பேரானந்தம் உம் பிரசன்னம் மாறாதது உந்தன் வசனம் கேருபீன்கள் உம் வாகனம் உம் சரீரமே என் போஜனம் பூலோகத்தின் நல் ஒளியே மேலோகத்தின் நல் வழியே பக்தரைக் காக்கும் வேலியே குற்றம் இல்லாத பலியே
2. நீர் பேசினால் அது வேதம் உம் வார்த்தையே பிரசாதம் உம் வல்ல செயல்கள் பிரமாதம் போதும் போதும் நீர் போதும் கண்ணோக்கி எம்மைப் பாரும் இமைவிலக்கி என்னைக் காரும் இன்றே எம் பந்தியில் சேரும் வாரும் நீர் விரைவில் வாரும்