தேவாதி தேவன் இராஜாதி
devaadhi devan iraajaadhi
1. தேவாதி தேவன் இராஜாதி இராஜனே வானாதி வானம் உம்மைக் கொள்ளாதே அநாதி தேவனே நீர் நித்ய நித்ய மாணவர் அநாதி காலம் உம்மை வாழ்த்திப் போற்றுவேன்
நம்பி வந்தேன் உந்தன் சமூகமே மகிமை வல்லமை நிறைந்த சமூகமே இன்முகம் நான் கண்டு இன்ப சத்தம் கேட்டு இயேசுவே உம் சித்தம் செய்வேனே
2. "சீறாதே அலையே இம்மட்டில் நில்!'' என்ற மறா உம் வள்ளி வாக்கால் நின்றதே கரையில்லா உன் நேச கைத்தலத்தால் தாங்கியே மறைத்து யாத்திரையில் பாதுகாத்தீரே - நம்பி
3. நான் சேவிப்பவரும் ஆட்கொண்ட நாதனும் ஜீவாதிபதியும் நீர் எனக்கு வியாதி வேளையில் எந்தன் வைத்தியனும் நீரன்றோ வேதனை வேளையிலும் ஒளஷதம் நீரே - நம்பி
4. உலர்ந்த அஸ்திகள் உயிர டைந்துமே மாபெரும் சேனையாய் நின்றதுவே உயிர்ப்பித்தென்னை வல்ல வீரனாக மாற்றியே உன்னத ஆவியால் உம்மோடு யர்ந்திடும் - நம்பி
5. இன்னும் ஒரு தரம் அசைத்திடும்போது உண்டாக்கப்பட்ட சாயலாகுவேன் அக்ஷயா இயேசுவே உம் சாயலில் வளர்ந்துமே அக்ஷய ரூபனாகி நித்யம் சேவிப்பேன் - நம்பி