தேவா நானும்மை போற்றுவேன்
devaa naanummai potruven
தேவா நானும்மை போற்றுவேன் இயேசு தேவா நானும்மை நேசிப்பேன் தேவா நானும்மை போற்றுவேன்
கல்வாரி சிலுவையில் சொல்லொண்ணாப் பாடுகளை என் ஆத்ம நேசரே நீர் எனக்காக சகித்தீரே
1. அன்பால் நிறைந்த அருளே உந்தன் நல்லாசி தந்தருளுமே அன்பால் நிறைந்த அருளே உந்தன் நல்லாசி தந்தருளுமே என்றும் எல்லையில்லா உமது வல்லமையால் எனது உள்ளம் நிறைந்து உம்மை வாழ்த்திட வரமருள். - தேவா
2. பாவங்கள் மன்னித்தீர் தேவா எந்தன் பாடுகள் நீக்கினீர் நாதா பாவங்கள் மன்னித்தீர் தேவா எந்தன் பாடுகள் நீக்கினீர் நாதா அன்பின் அன்னையும் என்னை மீட்ட தந்தையும் நீரே இயேசு நாதா எந்நாளும் என்னை ஏற்றுக் கொண்டருளுவார். - தேவா