அழைத்தவர் நடத்துவார் அவரீன் சித்தம்
azhaithavar nadathuvaar avareen sitham
அழைத்தவர் நடத்துவார் அவரீன் சித்தம் பிழைத்திட உனக்கேன் இனி வருத்தம் உழைத்திட அவருக்காய் செய்திடு தத்தம் தழைத்திட செய்திடுவார் கலங்காதே நித்தம்
கலங்கின உந்தன் நொறுங்குண்ட நெஞ்சம் நலம் தந்து சேர்ப்பார் வந்திடு தஞ்சம் உளமாற தேவனை தினம் நீ கெஞ்சும் வளமான வாழ்வு வந்து உன்னில் மிஞ்சும்
மனதை குழப்பி உன்னை அழிக்காதே மனம்போல நாட்களை நீ கழிக்காதே உன்னுடைய வாழ்வை நீ பழிக்காதே உன்னை மரணம் எழுப்பும் நீ விழிக்காதே
வாழ்ந்து காட்டிடவே பலவழி உண்டு தொடர்ந்து நடக்கணும் நல்வழி கண்டு வீழ்ந்திடாமல் நிமிர்ந்து நீ நின்று வெற்றி பெற்று சிறக்கணும் நீ சென்று