அழகோ அழகே கண்ணீரும்
azhago azhagae kanneerum
அழகோ அழகே கண்ணீரும் வருதே அழகோ அழகே கல்வாரி அழகே (2)
எனக்காக அடிக்கப்பட்ட உம் சரீரம் அழகே எனக்காக தாங்கி கொண்ட வேதனைகள் அழகே அன்பாலே அழகே தியாகங்கள் அழகே கல்வாரியும் அழகே அன்பாலே அழகே
கல்வாரி மலையின் மேல் பார சிலுவை தோளின் மேல் தடுமாறி போகின்றீர் பாவி என்னைத் தேடி (2)
நீர் படைத்த மனிதன் உம் முகத்தில் உமிழும் பொழுது அழகாக சகித்து கொண்டீர் உந்தன் அன்பு அழகு எளியவனின் கரங்கள் உம்மை காயப்படுத்தும் பொழுது அழகாக ஏற்றுக்கொண்ட உந்தன் அன்பு அழகு