அத்திமரம் போல் எத்தனை
athimaram pol ethanai
அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்? தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள்?
1. பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம் இயேசு ஆசையோடு கனியைத் தேடினார் ஏமாற்றம் இப்படித்தானே மனிதர்கள், வாழும் வாழ்க்கை பல வேஷம்
2. ஊருக்குள்ளே உத்தமர் போல் நடிப்பார்கள் ஆனால் உண்மையிலே அத்தி மரம் போல் இருப்பார்கள் பேசுவதெல்லாம் வேதங்கள், போடுவதெல்லாம் வேஷங்கள்
3. ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும் வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும் அன்பு அதிலே இல்லையென்றால், வாழ்ந்து என்ன லாபம் தான்
4. மனிதனை மட்டும் நம்புவதாலே பயனில்லை ஆனால் இறைவனை மட்டும் நம்பிடுவாய் துன்பமில்லை கவலைகள் எல்லாம் போக்கிடுவார், கண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்