அற்புதங்கள் செய்யும் தேவன்
arpudhangal seyyum devan
அற்புதங்கள் செய்யும் தேவன் என்னை தாங்குவார் அதிசயம் செய்யும் கர்த்தர் என்னை வழிநடத்திடுவார்-2 ஆராய்ந்து முடியாத காரியங்கள் எனக்கு காட்டிடுவார் எண்ணி முடியாத அதிசயங்கள் எனக்கு செய்திடுவார்
பல்லவி
உயர்ந்த அடைக்கலம் நீரே என் கோட்டை நீர் தானே என் கன்மலையான கிறிஸ்தேசு கர்த்தாவே-2
1.நித்தம் நித்தம் என் சத்தம் கேட்பவரே கால்கள் இடறாமல் பாதுகாப்பவரே கூப்பிடும் வேளையில் செவியை சாய்ப்பவரே வாக்கு மாறா என் நேசர் நீர் ஒருவரே
உயிரே உம்மை நான் ஆராதிப்பேன் உம்மையே என்றும் நான் துதித்திடுவேன்
பல்லவி
உயர்ந்த அடைக்கலம் நீரே என் கோட்டை நீர் தானே என் கன்மலையான கிறிஸ்தேசு கர்த்தாவே-2
2.மேகமாய் என்னோடு கூட வருபவரே தீங்கு நாளில் என்னை தாங்கும் தேவனே துன்ப வேளையில் துணையாய் இருப்பவரே இன்பமாக என்னை வாழ வைப்பவரே
நிறைவே நிறைவாய் தருபவரே என் மனதின் வாஞ்சையை நிறைவேற்றுவீரே
பல்லவி
உயர்ந்த அடைக்கலம் நீரே என் கோட்டை நீர் தானே என் கன்மலையான கிறிஸ்தேசு கர்த்தாவே-2