அற்புதம் அடையாளம்
arpudham adaiyaalam
அற்புதம் அடையாளம் நடக்கப் போகுது ஆனந்த மகிழ்ச்சியை காண போகுது...(2) அந்தகார வல்லமைகள் ஓடப் போகுது செய்வினை கட்டுகள் சிதறப் போகுது... (2)
இயேசுவின் இரத்தம் காக்க போகுது.. நேசரின் இரத்தம் மீட்கப் போகுது...(2) சிலுவையின் இரத்தம் பேசப்போகுது... சிறைவாழ்வு இன்று மாறப்போகுது...(2)
1.உங்கள் துக்கம் மாறப்போகுது.. உங்கள் ஏக்கம் தீரப்போகுது...(2) கண்ணீர் எல்லாம் களிப்பாகுது... கவலைகள் எல்லாம் (பறந்துப்போனது) கடந்துப்போனது...(2)
2.பேசாத நாவுகள் பேசப் போகுது... விளங்காத கைகள் விளங்கப் போகுது...(2) தீராத நோய்கள் தீரப் போகுது... திறவாத கதவுகள் திறக்கப் போகுது(2)
3.அபிஷேகம் நுகங்களை முறித்திடுதே அடிமைதனங்களை நொறுக்கிடுதே (2) தடைகளை எல்லாம் தகர்த்துதிடுதே தாபரம் (எந்தன்)என்றும் இயேசு நாமமே!!!(2)
4.முடவனும் நடப்பான் இயேசு நாமத்தால் குருடனும் பார்ப்பான் இயேசு நாமத்தால்(2) குடும்பங்கள் மகிழ்ந்திடும் இயேசு நாமத்தால் பிரிவுகள் உறவாகும் இயேசு நாமத்தால்...(2)
5.விளைச்சல் மிகுதியானதினாலே (வீறுகொண்ட தலைமுறை எழும்பணுமே) ... வெளிச்சத்தின் பிள்ளைகள் எழும்பணுமே...(2) அறுவடை நாட்கள் அருகினிலே ஆயத்தமாவோம் திருச்சபையே !!!(2)