அப்பா உம்மை நான்
appaa ummai naan
அப்பா உம்மை நான் மிகவும் மிகவும் நேசிக்கிறேன் உந்தன் அன்பை நினைத்து - உம் பக்கம் பக்கம் நெருங்குகிறேன் அல்லேலூயா அல்லேலூயா (8)
குப்பையில் இருந்து என்னை மிகவும் உயர தூக்கினீர் புழுதியில் இருந்து என்னை உயர் உயர உயர்த்தினீர் -2
துணிகர பாவம் நான் செய்தவனாய் இருந்த போதும் என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணி பெயர் சொல்லி அழைத்தீரே
நிச்சயமாய் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லி ஆசீர்வதித்து அதையும் நான் அநுபவித்து மகிழச் செய்தீர்
சொந்த இரத்தம் சிந்தி என்னை பிள்ளையாக மாற்றினீர் அப்பா என்று சொல்லி மகிழ உரிமையை எனக்குத் தந்தீர்
சத்துரு எனக்கெதிராய் வந்து கொடிகள் ஏந்தி எதிர்த்த போதும் ஆவியான தேவன் எனக்காய் பெருவெள்ளமாய் எதிர்த்தார்