அப்பா உம் கிருபைக்கு
appaa um kirubaikku
அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர் எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2 எல்லாமே வாய்த்திடுமே எனக்கெல்லாமே வாய்த்திடுமே
வாழ்ந்தாலும் என்ன? வீழ்ந்தாலும் என்ன? என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2
1.திருமுகம் தினம் பார்ப்பதால் வழி முழுவதும் பயம் இல்லையே-2 கரடான எந்தன் பாதைகள் எல்லாம் சமமாக்கி தந்தீரய்யா-2 பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லை என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2
2.சிலுவையின் நிழலடியில் என் களைப்புகள் போக்கிடுவேன்-2 மழையானாலும் (பெரும்) புயலானாலும் நான் தங்கும் கூடாரம் நீர்-2 எதுவந்த போதும் விலகாமல் என்றும் என்னை காக்கும் உந்தன் கரம் பார்க்கின்றேன்-2