அப்பா நான் தவறு செய்தேன்
appaa naan thavaru seydhen
அப்பா நான் தவறு செய்தேன் உம அன்பை உதறி சென்றேன் நன் கெட்டலைந்து திரும்பி வந்தேன் எமை கண் பாரும் உந்தன் பிள்ளை நான்
சுமைகளில் சோர்ந்தோரை என்னிடத்தில் வாரும் என்றீர் அந்த ஆறுதல் வார்த்தை என்னை உம்மிடத்தில் ஈர்த்ததைய்யா
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் நீர் என்று அறிந்த பின்னும் வேறு எங்கு நான் போவேன் எந்தன் புகலிடம் நீரே அப்பா
பாடி வரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும் உம அன்பில் மகிழ்ந்திருக்க நான் உம்மை பிரிந்து நொந்தேன்