அனுதினம் காத்தீரையா இயேசையா
anudhinam kaatheeraiyaa iyesaiyaa
அனுதினம் காத்தீரையா இயேசையா கோடி நன்றி சொல்கிறேன்
கிருபை தாருமே - உம் (2)
பெலவீன நேரங்களில் பெலன் தந்து தாங்கினீரே தனிமையின் நேரங்களில் துணையாக அருகில் வந்தீர்
போக்கிலும் வரத்திலும் பத்திரமாக காத்தது உம் கிருபை பொல்லாத தீங்கிற்கு விலக்கினதும் தேவனே உம் கிருபை
மார்த்தாளைப் போல ஓடின என்னை உம் பாதம் அமர்ந்திட செய்ததும் நன்மை மாறாத உம் பிரசன்னம் எப்போதும் என்மேல் தாரும்