அன்புத் தந்தையே என் இறைவா
anbuth thandhaiyae en iraivaa
அன்புத் தந்தையே என் இறைவா அனுதினம் போற்றுகிறேன் நீரல்லால் எனக்கு வாழ்வு இல்லை நீரல்லால் வேறு வழியுமில்லை
1. அநாதி சிநேகத்தால் அன்பு கூர்ந்தார் காருண்யத்தால் என்னை இழுத்துக் கொண்டீர் முடிவு வரும் அன்பு கூர்ந்தால் சிலுவையில் எனக்காக பலியானீர்
2. எனது பெலவீனம் ஏற்றுக்கொண்டு பெலவானாய் என்னை மாற்றினவர் உம்மாலே சேனைக்குள் பாய்ந்து சென்றிட உன்னத ஆவியை கொடுத்தீரய்யா
3. உமது காயத்தால் என் நோய்களை சுகமாக்கி என்னைக் மீட்டுக் கொண்டார் உலகின் ஒளியே உத்தமர் துணையே உம்மை துதித்து தினம் பாடுவேன்
4. மெய்யாகவே என் பாடுகள் ஏற்றுக் கொண்டு துக்கங்களை நீரே சுமந்தீரைய்யா எனக்காக காயப்பட்டு நொறுக்கப்பட்டார் இயேசுவே உமதன்பு என்றும் போதும்