அன்பின் உருவானவரே
anbin uruvaanavarae
அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே
ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம் ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம்
1. மகிமை விடுத்து மரணம் சகித்து மந்தை காத்த மேய்ப்பன் நீரே உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே
2. துயரம் நிறைந்து அழகை இழந்து காயப்பட்ட தெய்வம் நீரே பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே
3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல் வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே