அன்பின் தேவனே இன்ப ராஜனே
anbin devanae inba raajanae
அன்பின் தேவனே இன்ப ராஜனே அன்பால் என்னைக் கவர்ந்திட்டிரே சொந்தமாக்கவே உந்தன் இரத்தத்தால் பாவம் கழுவி மீட்டிட்டீரே
நன்றியோடு நான் பாடுவேன் நன்மைகளைச் சொல்லி புகழ்வேன்
நன்றியறியாத மனிதருக்கும் துரோகிகளான மாந்தருக்கும் நன்மைகளை செய்திடவே நாதன் இயேசு பூவில் வந்தனரே
கிருபையின் வாசல் திறந்திடவே மேன்மை யாவையும் துறந்தீர் பாடுகளை ஏற்றுக்கொண்டு பாரில் எந்தனையே வாழ வைத்தீர்
சாத்தானை மரணத்தால் வென்றிடவே சிலுவை மரத்தினில் மரித்தீர் வெற்றியுடன் உயிர்த்தெழுந்தீர் வேந்தனாக இன்றும் ஜீவிக்கின்றீர்