அன்பரின் நாமம் இன்பமாய் போற்றி
anbarin naamam inbamaay potri
அன்பரின் நாமம் இன்பமாய் போற்றி இன்னோசையால் நாம் வாழ்த்திடுவோம் ஜெயமடைந்த சுத்தர்களாக ஜெயகீதம் பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்று ஆர்ப்பரிப்போம் ஆனந்தம் கொண்டு என்றுமே வாழ்ந்து ஓயா துதி சாற்றிடுவோம்
1. சோதனை வென்ற சுத்தர் யாவரும் துன்பம் தொல்லைகள் யாவும் அகன்று ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலித்து வெண் உடை தரித்தோராய்
2. தூதரின் மத்தியில் மகிழ்ந்து கொண்டாடிட தூயரின் சத்தம் கேட்டு மகிழ்ந்திட வாசனை வீசும் பூக்களின் மத்தியில் இன்பமாய் நாம் வாழுவோம் (அல்லேலூயா )
3. கண்ணீர் துயர்கள் கவலைகள் போக்கி ஓய்வின்றி பாடும் மோட்ச நகரில் தங்க கிரீடம் தலையில் தரித்து தலைவனை போற்றுவோம்
4. மோட்ச பாக்கியத்தை நினைக்கும் போது பொங்குதென் உள்ளம் சந்தோஷத்தாலே எப்போ வருவார் என்னையும் சேர்ப்பார் நேசர் மார்பில் சாருவேன் (அல்லேலூயா )