அன்பே என்றென்னை
anbae endrennai
அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே நன்றியுடன் பாடுகின்றேன்-2
நான் தனிமை என்றெண்ணும்போது தாங்கி கொண்டீரே தயவால் அணைத்துக்கொண்டீரே நான் ஆராய்ந்துக் கூடாத நன்மை செய்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே-அன்பே
1.என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர் அதை மிஞ்சும் அன்பை உம்மில் கண்டேனே-2 நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய்-2 என்னை நான் தாழ்த்துகின்றேன்-அன்பே
2 நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர் என்னை விடாத அன்பை உம்மில் கண்டேனே-2 நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய்-2 என்னை நான் தாழ்த்துகின்றேன்-அன்பே