அன்பான தேவனே என் நேசரே
anbaana devanae en nesarae
அன்பான தேவனே என் நேசரே அளவில்லாத கிருபை தந்த எபினேசரே உம் அன்பு வார்த்தையால் என்னை ஆசீர்வதிக்கிறீர்.. உம் அழகு கரங்களால் என்னை தூக்கி சுமக்கிறீர்...
பல்லவி
கண்ணீரை கணக்கில் வைக்கிறீர் அமுக்கி குலுக்கி மடியில் தருகிறீர்(2)
காயங்களை ஆற்றுகிறீர், உடைந்த உள்ளத்தை ஒன்றாக்கினீர். உம் கரத்தில் ஏந்தி என்னை, உன்னத நன்மையால் நிரப்புகிறீர்.(2) விழுந்த இடத்திலே என்னை எழும்ப செய்கிறீர், புதிய கிருபையால் என்னை அலங்கரிக்கிறீர்
பல்லவி
கண்ணீரை கணக்கில் வைக்கிறீர் அமுக்கி குலுக்கி மடியில் தருகிறீர்(2)
என் முன் செல்லும் உம் சமூகம், எல்லா தீமையும் விலகிவிடும். பாதம் கல்லில் இடராமால் என்னை தாங்கும் உம் தூதர் கூட்டம்(2) வறண்ட பூமி நான் என்னை செழிக்க செய்கிறீர் உம் ஒரே வார்த்தையால் நீரூற்றய் காட்டினீர்...
பல்லவி
கண்ணீரை கணக்கில் வைக்கிறீர் அமுக்கி குலுக்கி மடியில் தருகிறீர்(2)