அநாதி அன்பினாலே
anaadhi anbinaalae
அநாதி அன்பினாலே பிரித்தீரே உம் சாயலாய் வாழ்ந்திட நானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால் என் உள்ளம் மகிழுதே
நிலை இல்லா எந்தன் வாழ்வில் நிலையான உறவானீர் தள்ளினோர் முன்னிலையில் ஆயிரங்களை ஆசீர்வதித்தீர் (2)
கருவில் தோன்றின நாள் முதல் இந்நாள் வரை என்னை மறக்கவில்லை (2) படைப்பின் காரணர் நீரே உந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் (2) - நிலை இல்லா
சிறுமையும் எளிமையுமான என்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே (2) உயிர் வாழும் நாளெல்லாம் உம் சாயலை பிரதிபலிப்பேன் (2) - நிலை இல்லா