அம்மாவின் பாசத்திலும்
ammaavin paasathilum
அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் மேலானதே அப்பாவின் பாசத்திலும் உம் பாசம் மாறாததே
மாறாத பாசம் மறையாத நேசம் இயேசப்பா உங்க அன்பு தான்
பாவமான உலகிலே பாவியான எனக்காய் மரித்த அன்பு இயேசுவே பாசமில்லா உலகிலே தவித்த எனக்காய் பாசங்காட்டி அனைத்த இயேசுவே
கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம் மனசே உடையுதே அப்பா இரத்தம் சிந்தினதை காயங்களும் பார்க்கையில் உள்ளம் உடையுதே அப்பா
இதுவரை வாழ்ந்ததும் உங்க அன்பு தான் ஒருபோதும் கைவிடவில்லையே இனியும் வாழ்வதும் உங்க அன்பு தான் ஆயுள் எல்லாம் என்னை நடத்திடுமே