அல்லேலூயா பாடியே பரமனை
alleluya paadiyae paramanai
அல்லேலூயா பாடியே பரமனை ஆராதனை செய்யுங்கள்
ஆகாய விரிவை அழகாய் விரித்திட்ட ஆண்டவரை வர்ணித்திடுங்கள் ஆழங்களை அளந்து ஞானமாய் வைத்திட்ட ஆதி பிதாவை வணங்குங்கள் என்றும் ஆராதனை செய்யுங்கள்
சூரியன் , சந்திரன் சுடர்விட செய்திட்ட சிருஷ்டிகரை போற்றிடுங்கள் செங்கடலை பிளந்து பாதை அமைத்திட்ட வல்லவரை வாழ்த்திடுங்கள் என்றும் ஆராதனை செய்யுங்கள்
வாலிப நாட்களில் வல்லவரை நினைக்க வழி செய்தவரை வாழ்த்துங்கள் வல்லமையால் நிறைந்து வழிநடத்தும் நாதனுக்கு வாழ் நாளெல்லாம் நன்றி கூறாங்கள் என்றும் ஆராதனை செய்யுங்கள்