அடி நெல்லு குத்துற பொண்ணு
adi nellu kuthura ponnu
தன தந்தன தான...
அடி நெல்லு குத்துற பொண்ணு (இங்க பாரு சின்னஞ் சிறு கண்ணு) நாங்க பாடுகிறோம் கேளு நின்னு
1. முன்னொரு நாளிலே பெத்தலகேம் ஊரிலே இயேசு சாமி பொறந்தாரு அவர் நமக்காக வந்தாரு - தன தந்தன தான..
2. கொட்டும் பனியிலே மிரட்டும் இருட்டுல மந்தைய காத்தாக மேய்ப்பர்கள் சேதிய கேட்டாக - தன தந்தன தான..
3. வானத்தை பார்த்துகிட்டு கணக்கு போட்டுகிட்டு ஞானிகள் வந்தாக மூணு பரிசுகள் தந்தாக - தன தந்தன தான..
4. உசுர கொடுக்க வந்த இயேசுவுக்காக என்னத்த கொடுத்தோங்க? நம்ம இதயத்தை கொடுப்போங்க!.. - தன தந்தன தான..