அதிசயமானவர் அற்புதமானவர் ஆச்சரியமான தேவன்
adhisayamaanavar arpudhamaanavar aacchariyamaana devan
அதிசயமானவர் அற்புதமானவர் ஆச்சரியமான தேவன் துதிகளின் பாத்திரர் தூயவராம் இயேசுவுக்கு புதியதோர் பாட்டுப் பாடுவோம் - அல்லேலூயா புகழ்மாலை சூட்டிப்பாடுவோம்
1. இதுவரை காத்த தேவன் நம்மை இகமதில் மீட்ட தேவன் புது ஜீவன் தந்த தேவன் - இனிய புது மனம் தந்த தேவன் பெலவீன நேரத்தில் பெலன் தந்து தேற்றிடும் கிருபையில் மாறா தேவன் என்றும் விலகிடா நல்ல மேய்ப்பர்
2. கலங்கிடும் நேரமெல்லாம் அருகில் கனிவுடன் வரும் தேவன் துயரங்கள் துக்கங்களை தூரம் எறிந்திடும் எந்தன் தேவன் எதிரியை வீழ்த்தி ஜெயக்கொடி ஏற்றி என் பயம் தீர்க்கும் தேவன் எனக்கு என்றென்றும் துணை அவரே
3. தாழ்மையில் கிடந்த என்னை தூக்கி தோள் மீது சுமக்கும் தேவன் - எளிமையும் சிறுமையுமான எனக்கு ஆளுகை தரும் தேவன் என் நிந்தை நீக்கி என் நிலை உயர்த்தி ஏக்கங்கள் தீர்க்கும் தேவன் எந்தன் பட்சமாய் பேசும் தேவன்
4. சிங்கங்கள் எதிர் வந்தாலும் பலத்த சீறிடும் அலை என்றாலும் அக்கினிச்சூளையிலும் என்னை அமிழ்த்திடும் பகை என்றாலும் அங்கேயும் எனக்கோர் அற்புதம் செய்வார் அவர் என்றும் மாறிடாரே எந்தன் அழுகையை மாற்றுவாரே
5. காலையில் என் அருகில் வந்து கனிவுடன் பேசும் தேவன் நாளெல்லாம் உடனிருந்து எதிலும் ஞானத்தை தரும் தேவன் கிருபை மேல் கிருபை பெலத்தின் மேல் பெலத்தை அளித்திடும் அன்பு தேவன் என்னை இரவிலும் தாங்கும் தேவன்