அதிசய தேவன் துணையிருப்பார்
adhisaya devan thunaiyiruppaar
அதிசய தேவன் துணையிருப்பார் அனுதினம் உன்னை காத்திடுவார் இவ்வேளையிலே நன்றியுடனே இன்ப கீதம் பாடி மகிழ்ந்திடுவாய்
1. உன்னையே பேர் சொல்லி அழைத்தவர் அன்புடனே உன்னை மீட்டவர் என்றுமாய் நீ என்னுடையவன் (2) என்றே அன்பாய் கூறுபவரே
2. எதிர்வரும் காலத்தில் அவர் கரம் அதிசயமாய் உன்னை தாங்கிடும் மதி நிறைந்தே அவரை துதிப்பாய் (2) புது ஆண்டிதில் புதுமை காண்பாய்