ஆழ்ந்த சேற்றினில்
aazhndha setrinil
ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரே இயேசு அணைத்து எடுத்தாரே அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு ஆறுதல் அளிப்பாரே இயேசு ஆறுதல் அளிப்பாரே
பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி கோபத்தை கலைத்தாரே இயேசு கோபத்தை கலைத்தாரே காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும் ஆகமம் ஆனாரே இயேசு ஆகமம் ஆனாரே
கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட கட்டுகள் அறுத்தாரே இயேசு கட்டுகள் அறுத்தாரே கல்வாரி பாதையில் பார சிலுவையை நொந்து சுமந்தாரே இயேசு நமக்கென பிறந்தாரே
பூவினில் வந்த தேவனை துதித்தால் தீவினை அகன்றிடுமே பாலகன் இயேசுவின் நாமத்தினில் ஜெபித்தால் பாசம் வளர்ந்திடுமே நல்ல பாசம் பாசம் வளர்ந்திடுமே