ஆவியில் அனலடைவோம் ஊழியம்
aaviyil analadaivom oozhiyam
ஆவியில் அனலடைவோம் ஊழியம் செய்திடுவோம் யேசுவின் வருகை வெகு சமீபம் ஆயத்தமாகிடுவோம்.
1. கோடான கோடி மானிடர்கள் யேசுவை அறியாமலே தினம் தினம் அழிகின்றாரே விழித்து எழுந்திடுவோம்.
2. ஆவியின் வரங்களினால் நிறைந்து சுவிசேஷம் கூறிடுவோம் அழிந்திடும் ஆத்துமாக்களை யேசுவுக்குள் கொண்டு வருவோம்.
3. கொடுத்திடுவோம் நாம் தாங்கிடுவோம் நற்செய்தி ஊழியத்தை ஜெபித்திடுவோம் வென்றிடுவோம் ஆயிரம் ஆயிரமாய்.