ஆவியல் ஜெபம் செய்யப் பெலன்
aaviyal jebam seyyap pelan
ஆவியல் ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி! அடைக்கலா உந்தன் துணை வேணும் நேமி!
1. தேவாவி அருள்மாரி எம் மேலனுப்பு தேவா ஜெபித்திட பெலன் வேண்டும் ஸ்வாமி.
2. முழு உள்ளம் கரைந்திட்டால் இதயத்திலிருந்து சுளுவாக வசனங்கள் சுரந்திடும் ஸ்வாமி.
3. வஞ்சக உதடுகள் வருந்திக் கேட்டாலும் தஞ்ச மென்றும்மை நான் அணுக விடீரே.
4. அதிகாலை ஜெபத்தாலே தேடி வந்தாலும் ஆதி பரன் ஆவி இல்லால் வியர்த்தம்.
5. பெலனற்ற ஏழைக்குப் பெலன் தாரும் ஸ்வாமி நலமாக நாவை நீர் மாற்றிடும் நேமி.
6. ஜெபம் செய்ய வாயை நீர் தொட்டிடும் ஸ்வாமி ஜெயம்பெற வகை பதம் கற்பியும் நேமி.
7. யேசுவின் ரத்தத்தால் இதயத்தைக் கழுவி நேசரின் ஆவியால் ஒருமிக்கச் செய்யும்.