ஆவியோடும் உண்மையோடும்
aaviyaeாtum unmaiyaeாtum
ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை தொழுதிடுவோம் பரிசுத்த அலங்காரத்துடனே நாமும் பரிசுத்தரை தொழுவோமே
1. நடுக்கத்தோடும் பயபக்தியோடும் கர்த்தரில் களிகூறுவோம் பனிந்து குனிந்து தலைகள் தாழ்த்தி பாதம் பணிந்திடுவோம் - அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தரிடம் பாவமில்லையே - அவர் பரிசுத்தம் எல்லையில்லையே
2. ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும் சந்நிதி வாருங்களே கர்த்தரே தேவன் மகாராஜன் என்றே சொல்லுங்களே-அவர் வாசலில் துதியோடும் புகழ்ச்சியோடும் வந்து கீர்த்தனம் பண்ணுங்களே -துதி பலிகளை செலுத்துங்களே
3. உதட்டிலல்ல உள்ளத்திலிருந்து ஸ்தோத்திர பலியிடுவோம் ஒன்று கூடி ஒருமனமாய் பாடி புகழ்ந்திடுவோம்-அவரே தேவன் நாம் அவர் ஆடுகளே அவர் சத்தியம் மேய்ந்திடுவோம்-அதில் என்றென்றும் நிலைத்திருப்போம்